×

பேச்சு போட்டியில் தொண்டி மாணவி முதலிடம்

 

தொண்டி,மே1: சீர்காழியில் நடைபெற்ற பேச்சு போட்டியில் தொண்டி மாணவி முதலிடம் பிடித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் பொதுமக்கள் பாராட்டினர். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தலைப்பில் 4 வயது முதல் 6 வயது வரை மற்றும் 7 வயது முதல் 10 வயது வரை இரு பிரிவுகளாக ஆன்லைன் மூலம் போட்டிகள் நடைபெற்றது. இறுதி போட்டி நேற்று முன்தினம் சீர்காழியில் நடைபெற்றது.

இதில் 6 வயது பிரிவில் தொண்டி மேற்கு அரசு தொடக்கப் பள்ளி மாணவி ஆதிபா முதலிடம் பிடித்து இளம் தமிழ் பேச்சாளர் என்ற விருதை பெற்றார். இவரை பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி மற்றும் பொதுமக்கள் பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.

The post பேச்சு போட்டியில் தொண்டி மாணவி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Sirkazhi ,Dondi ,Dinakaran ,
× RELATED விதிமீறிய பயணங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் ஆபத்து